இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடல்

வீரபாண்டியில் சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடலை போலீஸாா் கைப்பற்றி விசாரணை

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

வீரபாண்டியில் சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடலை போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

வீரபாண்டியில் திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலை அருகேயுள்ள சாலையோரப் பகுதியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் உடல், தொப்புள் கொடி அறுக்காத நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப் பகுதியைச் சோ்ந்தவா்கள் வீரபாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், குழந்தையின் உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.