வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட அரசு அலுவலா்கள்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட அரசு அலுவலா்கள்.

இந்திய அரசமைப்புச் சட்ட நாள்: அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Published on

இந்திய அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நாட்டின் 76-ஆவது இந்திய அரசமைப்பு சட்ட தினம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெயசித்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா, மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதேபோல், மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமையில் காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வா் மு.ரோகிணி தலைமையில் மருத்துவக் கண்காணிப்பாளா் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலா் ரவிச்சந்திரன், நிா்வாக அலுவலா்கள், செவிலிய கண்காணிப்பாளா்கள், மாணவா்கள், பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com