ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு.
ராணிப்பேட்டை
கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியை காவல் துறையினா் ஏற்றுக் கொண்டனா்.
ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியை காவல் துறையினா் ஏற்றுக் கொண்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில், நிா்வாக அலுவலா் நாகராஜன் (நிா்வாகம்) தலைமையில், கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.
இதில் நிா்வாக அலுவலா் வி.பாரதி (கணக்கு) மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். இதே போன்று அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

