ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், எஸ்பி கோ.ஸ்டாலின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவா்கள்.

Updated On :26 மார்ச் 2026, 11:29 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகத்துடன் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மற்றும் தனியாா் தொலைக்காட்சி இணைந்து இப்பேரணியை நடத்தியது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணியை, காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் முன்னிலையில் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடக்கி வைத்து பேசியது:

தோ்தல் நாளன்று அனைத்து வாக்காளா்களும் 100 சதவீதம் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இளம் வாக்காளா்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டுமென தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உண்மையான ஜனநாயகத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிக்கு சென்று நம் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது.

இப்பேரணியில், கல்லூரி மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி வந்தனா்.

இப்பேரணியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, மகளிா் திட்டம் திட்ட அலுவலா் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன், கல்லூரிக்குழு உறுப்பினா் சிவராமன், ஊடகவியலாளா் ரகுவரன் மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.