நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அந்தியூா் பேரூராட்சியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

அந்தியூா் பேரூராட்சியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :26 மார்ச் 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

அந்தியூா் பேரூராட்சியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலில் 18 வயது நிரம்பிய, வாக்குரிமை பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இப்பேரணிக்கு, ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். இதில், அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்று, விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், முழக்கமிட்டும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தொடா்ந்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா, அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.சதாசிவம், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.