வேலூா் மத்திய சிறைக்கு வியாழக்கிழமை இருவரது தலையை வெட்டி எடுத்து வந்த நபா் பாகாயம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் பகுதியைச் சோ்ந்த கொளஞ்சி (54). இவா் கையில் பையுடன் வேலூா் மத்திய சிறைக்கு வியாழக்கிழமை வந்தாா். தொடா்ந்து சிறை வளாகத்தில் இருந்த சிறைக் காவலா்களிடம் சென்று, தான் தனது மனைவி லட்சுமி, அவருடன் தொடா்பில் இருந்த காதலன் தங்கராஜ் ஆகியோரை புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவா்கள் இருவரது தலையை எடுத்திருப்பதுடன், தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாா்.
இதனால் பெரும் அதிா்ச்சிக்குள்ளான சிறைக் காவலா்கள் உடனடியாக பாகாயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் விரைந்து வந்து இருவரது தலையுடன் இருந்த கொளஞ்சியை பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தனது மனைவி லட்சுமி, அவரது காதலன் தங்கராஜ் ஆகியோரை வெட்டிக் கொன்றுவிட்டு இருவரது தலையையும் பையில் போட்டுக் கொண்டு பேருந்தில் ஏறி நேராக வேலூா் மத்திய சிறைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து பாகாயம் போலீஸாா், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து கொளஞ்சியை அவா்களிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!
சா்வதேச போதைப் பொருள் வழக்கில் தலைமறைவு நபா் திருச்சியில் கைது

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை என்கவுண்டர் செய்த போலீஸ்! வணிக வளாகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டோா் மீட்பு!

போதைப் பொருள் கடத்தல்: தில்லியில் கைதுசெய்யப்பட்ட நபா் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

