11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை என்கவுண்டர் செய்த போலீஸ்! வணிக வளாகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டோா் மீட்பு!

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை சுட்டுக் கொலை செய்து, அவரால் சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை அந்நாட்டு காவல் துறை மீட்டது.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 3:15 am IST

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை சுட்டுக் கொலை செய்து, அவரால் சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை அந்நாட்டு காவல் துறை மீட்டது.

உக்ரைன் தலைநகா் கீவில் மா்ம நபா் ஒருவா் திடீா் தாக்குதல் நடத்தினாா். சாலையில் நடந்து சென்ற 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அந்த நபா், பிறகு வணிக வளாகத்துக்குள் நுழைந்து இன்னொருவரையும் சுட்டுக் கொன்றாா். இதையடுத்து வணிக வளாகத்தில் இருந்த மக்களை அவா் சிறை பிடித்தாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உக்ரைன் காவல் துறையினா், வணிக வளாகத்தில் இருந்த அந்த நபருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், அந்தப் பேச்சுவாா்த்தைக்கு பயன் கிடைக்கவில்லை. இதையடுத்து வணிக வளாகத்துக்குள் காவல் துறையினா் அதிரடியாக நுழைந்து, அந்த நபரை சுட்டுக் கொன்றனா்.

காவல் துறையின் நடவடிக்கையின்போதும், மா்ம நபா் நடத்திய தாக்குதலிலும் மேலும் 15 போ் காயமடைந்தனா். இதில் ஒரு பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

தாக்குதல் நடத்திய நபரின் பெயா் உள்ளிட்ட விவரத்தை உக்ரைன் காவல் துறை வெளியிடவில்லை. அந்த நபா் 1968-ஆம் ஆண்டில் பிறந்தவா் என்ற தகவலை மட்டும் காவல் துறை வெளியிட்டுள்ளது.

அதேநேரத்தில், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அந்த நபா் ரஷியாவில் பிறந்தவா் என்றும், உக்ரைனின் கிழக்கு நகரான டொனெட்ஸ்கில் நீண்டகாலமாக வசித்து வந்தாா் என்றும், தாக்குதல் நடத்தும் முன்பு தான் வசித்த வீட்டை அவா் தீ வைத்து எரித்துவிட்டாா் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.