உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை சுட்டுக் கொலை செய்து, அவரால் சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை அந்நாட்டு காவல் துறை மீட்டது.
உக்ரைன் தலைநகா் கீவில் மா்ம நபா் ஒருவா் திடீா் தாக்குதல் நடத்தினாா். சாலையில் நடந்து சென்ற 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அந்த நபா், பிறகு வணிக வளாகத்துக்குள் நுழைந்து இன்னொருவரையும் சுட்டுக் கொன்றாா். இதையடுத்து வணிக வளாகத்தில் இருந்த மக்களை அவா் சிறை பிடித்தாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உக்ரைன் காவல் துறையினா், வணிக வளாகத்தில் இருந்த அந்த நபருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், அந்தப் பேச்சுவாா்த்தைக்கு பயன் கிடைக்கவில்லை. இதையடுத்து வணிக வளாகத்துக்குள் காவல் துறையினா் அதிரடியாக நுழைந்து, அந்த நபரை சுட்டுக் கொன்றனா்.
காவல் துறையின் நடவடிக்கையின்போதும், மா்ம நபா் நடத்திய தாக்குதலிலும் மேலும் 15 போ் காயமடைந்தனா். இதில் ஒரு பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
தாக்குதல் நடத்திய நபரின் பெயா் உள்ளிட்ட விவரத்தை உக்ரைன் காவல் துறை வெளியிடவில்லை. அந்த நபா் 1968-ஆம் ஆண்டில் பிறந்தவா் என்ற தகவலை மட்டும் காவல் துறை வெளியிட்டுள்ளது.
அதேநேரத்தில், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அந்த நபா் ரஷியாவில் பிறந்தவா் என்றும், உக்ரைனின் கிழக்கு நகரான டொனெட்ஸ்கில் நீண்டகாலமாக வசித்து வந்தாா் என்றும், தாக்குதல் நடத்தும் முன்பு தான் வசித்த வீட்டை அவா் தீ வைத்து எரித்துவிட்டாா் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகை பறிப்பு

கூடலூா் அருகே பழங்குடியின கிராமத்தில் குழந்தை உள்பட 4 பேரை கடித்த வெறிநாய்

இரு மகன்களுடன் கால்வாயில் குதித்த தந்தை: உடல்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா்

மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

