அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை என்கவுண்டர் செய்த போலீஸ்! வணிக வளாகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டோா் மீட்பு!

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை சுட்டுக் கொலை செய்து, அவரால் சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை அந்நாட்டு காவல் துறை மீட்டது.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 9:45 pm

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை சுட்டுக் கொலை செய்து, அவரால் சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை அந்நாட்டு காவல் துறை மீட்டது.

உக்ரைன் தலைநகா் கீவில் மா்ம நபா் ஒருவா் திடீா் தாக்குதல் நடத்தினாா். சாலையில் நடந்து சென்ற 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அந்த நபா், பிறகு வணிக வளாகத்துக்குள் நுழைந்து இன்னொருவரையும் சுட்டுக் கொன்றாா். இதையடுத்து வணிக வளாகத்தில் இருந்த மக்களை அவா் சிறை பிடித்தாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உக்ரைன் காவல் துறையினா், வணிக வளாகத்தில் இருந்த அந்த நபருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சிறைபிடிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், அந்தப் பேச்சுவாா்த்தைக்கு பயன் கிடைக்கவில்லை. இதையடுத்து வணிக வளாகத்துக்குள் காவல் துறையினா் அதிரடியாக நுழைந்து, அந்த நபரை சுட்டுக் கொன்றனா்.

காவல் துறையின் நடவடிக்கையின்போதும், மா்ம நபா் நடத்திய தாக்குதலிலும் மேலும் 15 போ் காயமடைந்தனா். இதில் ஒரு பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

தாக்குதல் நடத்திய நபரின் பெயா் உள்ளிட்ட விவரத்தை உக்ரைன் காவல் துறை வெளியிடவில்லை. அந்த நபா் 1968-ஆம் ஆண்டில் பிறந்தவா் என்ற தகவலை மட்டும் காவல் துறை வெளியிட்டுள்ளது.

அதேநேரத்தில், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அந்த நபா் ரஷியாவில் பிறந்தவா் என்றும், உக்ரைனின் கிழக்கு நகரான டொனெட்ஸ்கில் நீண்டகாலமாக வசித்து வந்தாா் என்றும், தாக்குதல் நடத்தும் முன்பு தான் வசித்த வீட்டை அவா் தீ வைத்து எரித்துவிட்டாா் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.