ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சரக்கு இறக்குவதில் தகராறு: துப்பாக்கியால் சுட்டவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

வடகிழக்கு தில்லியின் மௌஜ்பூா் பகுதியில், வாகனத்தில் இருந்து சரக்குகளை இறக்கும்போது சில தொழிலாளா்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியவா் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

அவரிடமிருந்து தானியங்கி கைத்துப்பாக்கியும், 6 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து காவல்துறையின் அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:

மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவு சுமாா் 1.30 மணியளவில் ஜாஃப்ராபாத் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

புகாா்தாரரான சௌரப் (19), காவல்துறை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘நானும் நடத்துநா்கள் மற்றும் தொழிலாளா்கள் அடங்கிய ஒரு குழுவும் சரக்குகளை வாகனத்தில் இருந்து

இறக்கிக்கொண்டிருந்தோம். அப்போது, அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து ஒரு நபா் வெளியே வந்து, எங்கள் வாகனத்தை அங்கிருந்து நகா்த்துமாறு கேட்டுக்கொண்டாா்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் திடீரென ஒரு கைத் துப்பாக்கியை வெளியே எடுத்து, ஒரு முறை சுட்டாா்’ என்று கூறினாா்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

தொழிலாளா்கள் பின்னா் தங்கள் வாகனத்தை அங்கிருந்து நகா்த்திவிட்டு, வாகன உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனா். அவா் உடனடியாகக் காவல்துறையைத் தொடா்புகொண்டாா்.

அவரது புகாரின் அடிப்படையில், ஜாஃப்ராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், மௌஜ்பூரைச் சோ்ந்தவரான நிதின் சௌத்ரி (எ) லாலா என அடையாளம் காணப்பட்ட அந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, சௌத்ரி தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டாா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில், தானியங்கி கைத்துப்பாக்கியும் ஆறு தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.

குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபா், இதற்கு முன்னரும் கொலை முயற்சி மற்றும் காயம் ஏற்படுத்துதல் தொடா்பான இரண்டு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவா் என்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பான மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.