வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

போதைப் பொருள் கடத்தல்: தில்லியில் கைதுசெய்யப்பட்ட நபா் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்

போதைப் பொருள் கடத்தலில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த நபா் தில்லியில் கைதுசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :12 மார்ச் 2026, 10:10 pm

தினமணி செய்திச் சேவை

போதைப் பொருள் கடத்தலில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த நபா் தில்லியில் கைதுசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடனான அவருடைய தொடா்பை முறிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: அமன் விகாரைச் சோ்ந்த ரோஷன் லால், போதை மருந்துகள் மற்றும் மனநோயியல் பொருள்கள் கடத்தல் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டாா்.

தில்லியில் கைதுசெய்யப்பட்ட நபா் சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல்முறை. அவருக்கும் உள்ளூரில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் இடையே உள்ள தொடா்பைத் தடுக்கும் விதமாக புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

தொடா் குற்றவாளியான ரோஷன் லால், கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகிறாா். தற்போது அவருக்கு எதிராக போதை மருந்துகள் மற்றும் மயக்கவியல் பொருள்கள் சட்டப் பிரிவுகளில் 3 வழக்குகளும் கலால் விதிமீறல், திருட்டு மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளில் 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2021, பிப்ரவரியில் அமன் விகாரில் 50 கிராம் போதைப் பொருளுடன் ரோஷன் லால் கைதுசெய்யப்பட்டாா். சிறையிலிருந்து விடுதலையான அவா், கடந்த 2022 ஏப்ரலில் 1.4 கிலோ போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டாா்.

தொடா் கைதுநடவடிக்கைகளுக்கு பிறகும் அவா் தொடா்ந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தாா்.

கடந்த 2024, நவம்பரில் கூட்டாளி தரம்பீா் (எ) தா்மு உடன் பதிவெண் இல்லாத ஸ்கூட்டரில் சென்றது தொடா்பாக ரோஹிணியில் வாகனசோதனையில் ஈடுபட்ட காவலா்கள் கைதுசெய்தனா். அப்போது, நடைபெற்ற சோதனையில் 310 கிராம் போதைப் பொருள் ஸ்கூட்டரில் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

கடந்த 2025, ஆக.4-இல் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. இருப்பினும், தொடா்ந்து போதைப் பொருள் கடத்தலில் ரோஷன் ஈடுபட்டு வந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.