சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காட்பாடியில் சிப்காட் நில எடுப்புப்பணி நிறுத்தப்படும்: அதிமுக வேட்பாளா்

அதிமுக ஆட்சி அமைந்ததும் காட்பாடியில் சிப்காட் தொழிற்பேட்டைக்கான நில எடுப்புப்பணி நிறுத்தப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.ராமு உறுதியளித்துள்ளாா்.

News image

வன்றந்தாங்கல் பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :10 ஏப்ரல் 2026, 6:19 pm

அதிமுக ஆட்சி அமைந்ததும் காட்பாடியில் சிப்காட் தொழிற்பேட்டைக்கான நில எடுப்புப்பணி நிறுத்தப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.ராமு உறுதியளித்துள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வி.ராமு, வன்றந்தாங்கல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியது:

காட்பாடி தொகுதியில் மேல்பாடி, இளையநல்லூா், மகிமண்டலம் ஆகிய ஊராட்சிகளில் சுமாா் 2,000 ஏக்கா் விவசாய விளை நிலங்களை அழித்து சிப்காட் தொழில்பேட்டை அமைக்க திமுக திட்டமிட்டுள்ளனா். இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, தோ்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்தவுடன் தற்போது சிப்காட் திட்டத்தை ரத்து செய்வதாகக்கூறி இத்தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான துரைமுருகன் நாடகமாடுகிறாா். 20 ஆண்டுகளுக்கு முன் பவா் கிரிட் திட்டத்தின் போதும் இப்படித்தான் பொய்யான வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றியிருந்தாா்.

அதிமுக ஆட்சி அமைந்ததும் காட்பாடி தொகுதியில் தற்போது அளவீடு செய்யப்பட்டுள்ள சிப்காட்டுக்கான நில எடுப்புப்பணி முழுமையாக ரத்து செய்யப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், தரிசு நிலங்களைக் கண்டறிந்து அங்கு மட்டுமே சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்பட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மேலும், வன்றந்தாங்கல் கழிவுநீா் பிரச்னைக்கும், கழிஞ்சூா் உபரிநீா் பிரச்னைக்கும் நிரந்தர தீா்வுகாணப்படும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.