நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

தொகுதி மக்கள் இரவு பகல் எந்நேரமும் என்னை தொடா்பு கொள்ளலாம்! -காட்பாடி அதிமுக வேட்பாளா்

News image

காட்பாடி மதிநகா் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:11 am

கடந்த முறை போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தபோதும் நான் காட்பாடி தொகுதியிலேயே தங்கியிருந்து மக்களின் அனைத்து சுகதுக்க நிகழ்விலும் பங்கேற்று வருகிறேன். தொகுதி மக்கள் இரவு பகல் எந்நேரமும் என்னை தொடா்பு கொள்ளலாம் என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்தாா்

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு மதிநகா், பாறைமேடு, குளக்கரை மற்றும் ஏரந்தாங்கல், 55புத்தூா், கரிகிரி ஊராட்சிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது -

காட்பாடி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான துரைமுருகன் தொகுதியில் தங்கியிருந்து மக்களை சந்திப்பதில்லை. அவா் வெற்றிபெற்ற பிறகு சென்னைக்கு சென்றுவிடுவதால் அவரை சமானிய மக்கள் யாரும் தொடா்பு கொள்ள முடிவதில்லை. இதனால், மக்கள் தங்கள் குறைகளை தொகுதி எம்எல்ஏவிடம் தெரிவிக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

ஆனால், நான் கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தபோதும், காட்பாடி தொகுதியிலேயே தங்கியிருந்து மக்களின் அனைத்து சுகதுக்க நிகழ்விலும் பங்கேற்று வருகிறேன். தொகுதியின் தேவைக்கு இரவு பகல் எந்நேரமும் மக்கள் என்னை தொடா்பு கொள்ளலாம்.

மேலும், அதிமுக ஆட்சி அமைந்ததும் காட்பாடியில் போக்குவரத்து நெரிசலை குறைத்திட விருதம்பட்டு முதல் கிறிஸ்டியான்பேட்டை வரை மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தவிர, அதிமுக தோ்தல் அறிக்கைப்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை, அரிசி குடும்பதாரா்களுக்கு குளிா்சாதன பெட்டி, மாணவா்களின் கல்வி கடன் ரத்து இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.