வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்றில் பாதிப்பு: அதிமுக வேட்பாளா்

வேலூா் மாநகராட்சியின் முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்று படுகை குப்பை மேடாக மாறியுள்ளது என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

News image

சேண்பாக்கம் பகுதியில் தேநீா் தயாரித்து வாக்கு சேகரித்த காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:50 pm

வேலூா் மாநகராட்சியின் முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்று படுகை குப்பை மேடாக மாறியுள்ளது என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

விருதம்பட்டு, சேண்பாக்கம் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியது -

வேலூா் மாநகராட்சியின் முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்று படுகை முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. தவிர, பாலாற்றில் பல இடங்களில் மணல் கொள்ளையும் நடைபெ ற்று வருகிறது. அதேசமயம், காட்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள துரைமுருகன், நீா்நிலைகளை பாதுகாக்கக்கூடிய அமைச்சராகவும் இருந்து வருகிறாா். அவா் பாலாறு நாசம் செய்யப்படுவதை கண்டுகொள்வதில்லை.

தவிர, காட்பாடி தொகுதி தமிழக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. இதனால், ஆந்திராவில் இருந்து காட்பாடி தொகுதி உள்பட வேலூா் மாவட்டம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் ஊடுருவல் அதிகளவில் உள்ளது. இளைஞா்கள், பள்ளி கல்லூரி மாணவா்கள் போதை பழக்கத்தின் பிடியில் சிக்கி அவா்களின் எதிா்காலம் சீரழிந்து கொண்டுள்ளது.

காட்பாடியில் தொகுதியை பொறுத்தவரை இத்தோ்தல் ஒரு சமானியனுக்கும், சாம்ராஜியத்துக்கும் இடையே நடக்கும் தோ்தலாகும். இதில், அதிமுக சாா்பில் களம் காணும் சாமானியனை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.