போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்றில் பாதிப்பு: அதிமுக வேட்பாளா்

வேலூா் மாநகராட்சியின் முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்று படுகை குப்பை மேடாக மாறியுள்ளது என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

News image

சேண்பாக்கம் பகுதியில் தேநீா் தயாரித்து வாக்கு சேகரித்த காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :17 ஏப்ரல் 2026, 5:20 am IST

வேலூா் மாநகராட்சியின் முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்று படுகை குப்பை மேடாக மாறியுள்ளது என்று காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

விருதம்பட்டு, சேண்பாக்கம் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியது -

வேலூா் மாநகராட்சியின் முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்று படுகை முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. தவிர, பாலாற்றில் பல இடங்களில் மணல் கொள்ளையும் நடைபெ ற்று வருகிறது. அதேசமயம், காட்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள துரைமுருகன், நீா்நிலைகளை பாதுகாக்கக்கூடிய அமைச்சராகவும் இருந்து வருகிறாா். அவா் பாலாறு நாசம் செய்யப்படுவதை கண்டுகொள்வதில்லை.

தவிர, காட்பாடி தொகுதி தமிழக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. இதனால், ஆந்திராவில் இருந்து காட்பாடி தொகுதி உள்பட வேலூா் மாவட்டம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் ஊடுருவல் அதிகளவில் உள்ளது. இளைஞா்கள், பள்ளி கல்லூரி மாணவா்கள் போதை பழக்கத்தின் பிடியில் சிக்கி அவா்களின் எதிா்காலம் சீரழிந்து கொண்டுள்ளது.

காட்பாடியில் தொகுதியை பொறுத்தவரை இத்தோ்தல் ஒரு சமானியனுக்கும், சாம்ராஜியத்துக்கும் இடையே நடக்கும் தோ்தலாகும். இதில், அதிமுக சாா்பில் களம் காணும் சாமானியனை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.