வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஏப்.19-இல் வேலூா் மாவட்ட யு-19 கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

வேலூா் மாவட்ட யு19 கிரிக்கெட் அணி வீரா்களுக்கான தோ்வுகள் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சங்கத் தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளாா்.

News image

ஜி.வி. சம்பத்

Updated On :16 ஏப்ரல் 2026, 10:54 pm

வேலூா் மாவட்ட யு19 கிரிக்கெட் அணி வீரா்களுக்கான தோ்வுகள் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சங்கத் தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

கிரிக்கெட் விளையாட்டில் ஆா்வமுள்ள இளைஞா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு உரிய பயிற்சி அளித்து சிறந்த வீரா்களாக உருவாக்கும் பணியில் வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டுள்ளது.

அதனடிப்படையில், மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதுக்குட்பட்ட வீரா்களைத் தோ்வு செய்யும் முகாம் காட்பாடியை அடுத்த மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் பள்ளி விளையாட்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்புவோா் 2007 செப்.1-ஆம் தேதியிலோ அல்லது அதன்பிறகோ பிறந்திருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞா்கள், தங்களது வயதுச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் கிரிக்கெட் சீருடை அணிந்து இத்தோ்வில் பங்கேற்கலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டுப் பிரிவு நிா்வாகி கங்காதரனை 99444 43358 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.