ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும்

காட்பாடியில் குற்றச்சாட்டுகளை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

News image

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:31 pm

காட்பாடியில் குற்றச்சாட்டுகளை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.

அவா் வேலூா் மாநகராட்சி 6, 12- ஆவது வாா்டுகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசியது -வேலூா் மாவட்டத்தில் காட்பாடி மிக வேகமாக வளா்ந்து வரும் பகுதியாக உள்ளது. அதேசமயம், இப்பகுதியில் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகிறது.

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த காட்பாடியின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காவலா் பற்றாக்குறை போக்கவும், காட்பாடி பாதுகாப்புக்கு தேவையான கூடுதல் காவல் பிரிவுகளை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.--