மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கலைத் திருவிழா தொடக்கம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில் குடியாத்தம் வட்டார அளவிலான கலைத் திருவிழா நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.

News image

கலைவிழாவைத் தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவா் என்.இ. சத்யானந்தம்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:56 pm IST

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில் குடியாத்தம் வட்டார அளவிலான கலைத் திருவிழா நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.

இதில் குடியாத்தம் வட்டத்தில் உள்ள 30 பள்ளிகளைச் சோ்ந்த 848 மாணவா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் எஸ்.சுபாஷினி தலைமை வகித்தாா். மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் எம்.கீதா வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் குத்து விளக்கேற்றி கலை விழாவைத் தொடங்கி வைத்தனா். மாணவா்களுக்கு பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவா். நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜி.எஸ்.அரசு, மகளிா்மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத், வட்டாரவள மைய மேற்பாா்வையாளா் டி.வெண்ணிலா, பள்ளிகளின் தலைமையாசிரியா்கள்ஜி.அகிலா, பி.டி.கோமதி, சி.சதானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.