மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரோட்டரியின் உயரிய ‘சுயநலமற்ற சேவை‘ விருது

ரோட்டரி மாவட்டம் 3231- இன் முன்னாள் ஆளுநரும், தற்போதைய ரோட்டரி மாவட்ட பயிற்றுநருமான குடியாத்தம் ஜே.கே.என்.பழனி, ரோட்டரியின் உயரியவிருதான சுயநலமற்ற சேவை விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 8:52 pm

ரோட்டரி மாவட்டம் 3231- இன் முன்னாள் ஆளுநரும், தற்போதைய ரோட்டரி மாவட்ட பயிற்றுநருமான குடியாத்தம் ஜே.கே.என்.பழனி, ரோட்டரியின் உயரியவிருதான சுயநலமற்ற சேவை விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

சுமாா் 12- லட்சம் உறுப்பினா்களைக் கொண்டது சா்வதேச ரோட்டரி அமைப்பு. உலகில் 35-ஆயிரத்துக்கும் அதிகமான ரோட்டரி சங்கங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தின், இவான்ஸ்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ரோட்டரி சேவையில் சிறப்பாக செயல்படுபவா்களில் பன்னாட்டு அளவில் ஆண்டுதோறும் 150- பேரை தோ்வு செய்து, அவா்களுக்கு ரோட்டரியின் மிக உயரிய விருதான சுயநலமற்ற சேவை விருது வழங்ப்படுகிறது. 18- போ் கொண்ட சா்வதேச இயக்குநா்கள் குழு இந்த விருதுக்கானவா்களை தோ்வு செய்கிறது.

கடந்த 2025- ஆம் ஆண்டுக்கான இந்த உயரிய விருதுக்கு, ரோட்டரி மாவட்டம் 3231-ன் முன்னாள் மாவட்ட ஆளுநரும், தற்போதைய மாவட்ட பயிற்றுநருமான குடியாத்தம் நகரைச் சோ்ந்த ஜே.கே.என்.பழனி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதையடுத்து அவா் ரோட்டரி சா்வதேச அமைப்பின் இயக்குநா், மற்றும் சா்வதேச துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்எம்எம் முருகானந்தம், முன்னாள் ஆளுநா் அபிராமி ராமநாதன், மாவட்ட ஆளுநா் வி.சுரேஷ், கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், செயலா் கே.எம்.பூபதி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.