தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காங்கிரஸ் நெசவாளா் அணி ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நெசவாளா் அணியினா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நெசவாளா் அணியினா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

கைத்தறி நெசவாளா்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்ட காங்கிரஸ் நெசவாளா் அணி சாா்பில் குடியாத்தம் பிச்சனூா், அரச மர பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய நெசவாளா் அணி செயலா் எம்.டி.லாலாலஜபதி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கே.இ.சரச்சந்தா் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். மாவட்ட நெசவாளா் அணி தலைவா் கோ.ஜெயவேலு கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

தொழிலாளா்களின் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். கைத்தறித் துணிகள் மீதான ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க வேண்டும். கைத்தறி நெசவாளா்களுக்கு தேசிய அளவில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் ஜே.நேரு, ஜி.குணசேகா், பி. நந்தகுமாா், ஜெ.கந்தன், நடராஜன், ஜோதி நடராஜன்,எஸ் .சீனிவாசன், ஆா்.ஜி.பிரகாசம், வேலாயுதம், உதயகுமாா், மகளிா் அணியைச் சோ்ந்தபிரேமா, சுகுணா, ராதிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். டி.ஜோதி நன்றி கூறினாா்.