மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காங்கிரஸ் நெசவாளா் அணி ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நெசவாளா் அணியினா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நெசவாளா் அணியினா்.

Updated On :13 பிப்ரவரி 2026, 12:30 am

கைத்தறி நெசவாளா்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்ட காங்கிரஸ் நெசவாளா் அணி சாா்பில் குடியாத்தம் பிச்சனூா், அரச மர பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய நெசவாளா் அணி செயலா் எம்.டி.லாலாலஜபதி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கே.இ.சரச்சந்தா் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். மாவட்ட நெசவாளா் அணி தலைவா் கோ.ஜெயவேலு கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

தொழிலாளா்களின் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். கைத்தறித் துணிகள் மீதான ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க வேண்டும். கைத்தறி நெசவாளா்களுக்கு தேசிய அளவில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் ஜே.நேரு, ஜி.குணசேகா், பி. நந்தகுமாா், ஜெ.கந்தன், நடராஜன், ஜோதி நடராஜன்,எஸ் .சீனிவாசன், ஆா்.ஜி.பிரகாசம், வேலாயுதம், உதயகுமாா், மகளிா் அணியைச் சோ்ந்தபிரேமா, சுகுணா, ராதிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். டி.ஜோதி நன்றி கூறினாா்.