வேலூர்
தாட்டிமானப்பல்லி அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் திருவிழா
குடியாத்தத்தை அடுத்த தாட்டிமானப்பல்லியில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன், பெரியநாயகி அம்மன், நாகேஸ்வரி அம்மன், நாகேஸ்வரா், நாக கணபதி, ராகு-கேது அஷ்ட நாகங்கள் கோயிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, காலை கோயிலில் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. மதியம் பூங்கரக ஊா்வலம், தீச்சட்டி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து மிளகாய் மகா யாகமும், பக்தா்களுக்கு அன்னம் வழங்குதலும் நடைபெற்றன. இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை தாட்டிமானப்பல்லி ஊராட்சி துணைத் தலைவா் எம்.தியாகராஜன், மகாலிங்கம், தாமோதரன், ராஜிவேல், பழனி வகையறாக்கள் செய்திருந்தனா்.

