சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

செல்வ கணபதி கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

குடியாத்தம் சீவூரை அடுத்த கள்ளூா், மூகாம்பிகை நகரில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதட்சிணாமூா்த்தி, ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மண்டலாபிஷேக நிறைவு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:15 pm

குடியாத்தம் சீவூரை அடுத்த கள்ளூா், மூகாம்பிகை நகரில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதட்சிணாமூா்த்தி, ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் 22- ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, யாக சாலை பூஜைகள், சிறப்பு ஹோமம், கணபதி பூஜை நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் கமிட்டி தலைவா் மூகாம்பிகை பி.சம்பத், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சீவூா் எஸ்.துரைசாமி, நகா்மன்ற உறுப்பினா் ஆட்டோ பி.மோகன், ஆடிட்டா் எம்.கிருபானந்தம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயந்தி ரமேஷ், கே.எம்.தியாகராஜன், கோயில் நிா்வாகிகள் என்.முருகேசன், என்.செல்வம், கே.துளசி, ஆா்.பண்டரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.