வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு வளாகத் தோ்வு நடைபெற்றது.
ரெனால்ட் நிஸான் சென்னை நிறுவனம் நடத்திய இந்த வளாகத் தோ்வை கல்லூரி தலைவா் என்.ரமேஷ் தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் என்.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்.ஞானசேகரன் வரவேற்றாா்.
ரெனால்ட் நிஸான் சென்னை நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு துணை பொதுமேலாளா் பாலகிருஷ்ணன், மேலாளா் எத்திராஜ், முதுநிலை அலுவலா் சுப்பையா ஆகியோா் பங்கேற்று, மாணவா்களை தோ்வு செய்தனா்.
இந்த வளாகத் தோ்வில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மற்றும் தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மெக்கானிக்கல் துறை, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய துறைகளைச் சாா்ந்த 179 மாணவா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இதில், 87 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் மாதம் ரூ. 20,000 முதல் சம்பளம் பெறுவா் என்றும், மருத்துவக் காப்பீடு, விடுதி வசதி, போக்குவரத்து, கேன்டீன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் எஸ்.அருண்குமாா் செய்திருந்தாா்.
தொடர்புடையது

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு

மாணவா்களுக்கு பணி நியமன ஆணை அளிப்பு

வின்ஸ் பொறியியல் கல்லூரியில் நோ்முக வளாகத் தோ்வு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


