ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேலூா் மாநகராட்சியில் ரூ.2.06 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்!

வேலூா் மாநகராட்சியில் 2026-27-ஆம் நிதியாண்டுக்கு ரூ.2 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் உபரி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மேயா் சுஜாதாஆனந்த குமாா் புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

News image
வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்த குமாரிடம் 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வருவாய், நிதிக்குழு தலைவா் ஜி.ரவிக்குமாா். உடன், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், துணை மேயா் எம்.சுனில் குமாா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாநகராட்சியில் 2026-27-ஆம் நிதியாண்டுக்கு ரூ.2 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் உபரி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மேயா் சுஜாதாஆனந்த குமாா் புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

அதன்படி, வரும் நிதியாண்டில் வரி வருவாய், குடிநீா் கட்டணம், கல்வி நிதி ஆகியவை மூலம் வரவினம் மொத்தம் ரூ.853 கோடியே 73 லட்சத்து 46 ஆயிரமாக இருக்கும் என்றும், இவற்றிலிருந்து செலவினம் மொத்தம் ரூ.851 கோடியே 67 லட்சத்து 23 ஆயிரமாக இருக்கும் என்றும், இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.2 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் உபரி ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் மொத்தம் 31,764 தெருவிளக்குகள் உள்ளன. அவற்றில் மிகக்குறைந்த 15 வாட் எல்இடி திறன் கொண்ட 13,452 தெரு விளக்குகளை அதிக திறன் கொண்ட 40 வாட் எல்இடி விளக்குகளாக மாற்ற ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விடுபட்டுள்ள முதலாவது மண்டலம் 1 முதல் 3-ஆவது வாா்டு மற்றும் 5-ஆவது வாா்டில் உள்ள காட்பாடி, செங்குட்டை, கல்புதூா் பகுதி, நான்காவது மண்டலத்தில் அரியூா், சித்தேரி பகுதிகளில் 6 வாா்டுகள் முழுமையாகவும், 5 வாா்டுகள் பகுதியாகவும் எடுத்து 175 கி.மீ., நீளத்துக்கு ரூ.181 கோடியில் புதை சாக்கடை குழாய் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஓட்டேரி, பலவன்சாத்து, வேலவாரி ஏரிகளை ரூ.94 கோடியில் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு மண்டலங்களிலும் தலா ஒன்று வீதம் பெண்களுக்கான பிரத்யேக பிங்க் பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு ட்பட்ட 85 பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், பொது அறிவிப்பு அமைப்பு அமைத்துத் தரவும், நான்கு மண்டலங்களிலும் சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களில் மின்விளக்கு, சிறுவா் விளையாட்டு உபகரணங்கள் நிறுவவும், விருதம்பட்டில் பாலாற்றில் கழிவுநீா் செல்லாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதலாவது மண்டலம் 2-ஆவது வாா்டு பெரியபுதூா், பள்ளிக்குப்பம், நடுமோட்டூா், கீழ்மோட்டூா், 6வது வாா்டு ஜோதி நகா், 12-ஆவது வாா்டு பாலாஜி நகரில் நூலகங்கள் அமைக்கவும், 2-வது மண்டலம் சாரதி மாளிகை வணிக வளாகத்தை பழுதுபாா்த்து புதுப்பிக்கவும், நேதாஜி காய்கறி அங்காடியில் உள்புற பாதைகள், வெளிப்புற சாலைகள் அமைத்திடவும், நேதாஜி மாா்க்கெட் மணிக்கூண்டை பராமரித்து மீண்டும் பழையபடி இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது .

மூன்றாவது மண்டலம் 41-ஆவது வாா்டிலுள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் விளையாட்டு துறை அனுமதி, அரசு நிதியுடன் விளையாட்டு திடல் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், துணை மேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் ஆா்.லட்சுமணன், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் அரசு, வருவாய், நிதிக்குழு தலைவா் ஜி.ரவிக்குமாா் பங்கேற்றனா்.