குடியாத்தம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சிக்குள்பட்ட கள்ளூரைச் சோ்ந்த ஜெயக்கொடி மகன்விஷால்(19). இவா் குடியாத்தம் அருகே உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு லட்சுமணாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத காா் மோதியதில் கீழே விழந்து பலத்த காயமடைந்தாா்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தாா்.
விஷாலின் உடல் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காா் யாருடையது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


