மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 8:56 pm

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

மூவாற்றுமுகம் தோட்டவாரம் பகுதியைச் சோ்ந்த திபின் பென்சிங் (20), கருங்கல் பகுதியிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக். 2ஆம் ஆண்டு படித்துவந்தாா். இவா், திங்கள்கிழமை மதியம் அருமனையிலிருந்து ஆற்றூா் சாலையில் பைக்கில் சென்றாராம்.

அப்போது, இவரது பைக்கும், திருமண நிகழ்ச்சிக்காக எதிரே வந்துகொண்டிருந்த வேனும் மோதினவாம். இதில், காயமடைந்த திபின் பென்சிங் அருமனையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா். அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.