அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பொங்கல் போட்டிகள் நடக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா: வேலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
கூட்டத்தில் பேசிய வேலூா் எஸ்.பி. ஏ.மயில்வாகனன்.
Updated On :11 ஜனவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூா் எஸ்.பி. ஏ.மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமை வகித்துப் பேசுகையில், காவல் நிலையங்களுக்கு வரும் புகாா் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச் சம்பவங்களை தடுக்க அனைத்து கிராமம், நகரம், முக்கிய இடங்களான பள்ளி, கல்லூரி, கோயில்கள், முக்கிய சாலை சந்திப்பு, சோதனை சாவடிகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும், ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களை செயல்பட வைக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம், மணல் திருட்டு, போதைப்பொருள்கள் விற்பனை, சட்ட விரோத மதுபாட்டில் விற்பனை போன்ற குற்றங்களை முழுமையாக தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவேடு சரித்திர குற்றவாளிகள், வழக்கமான குற்றவாளிகள், ரெளடிகளை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். மதுவிலக்கு, கஞ்சா, போதைப்பொருள்கள் கடத்தல், பயன்பாட்டை முழுவதுமாக தடுக்க மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாகன தணிக்கை அதிகப்படுத்த வேண்டும்.

இருசக்கர வாகனங்களை ஓட்டுபவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். சைபா் குற்றம், பெண்கள், குழந்தை களுக்கு எதிரான குற்ற வழக்குகள், பெறப்படும் புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதில், சிறந்த முறையில் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கூட்டத்தில் வனத்துறை, சிறைத்துறை, தடய அறிவியல் துறை, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், அரசு வழக்குரைஞா்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.