திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வேலூரில் சுகாதாரம், சமத்துவப் பொங்கல் திருவிழா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் சுகாதாரம், சமத்துவப் பொங்கல் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
சாத்துமதுரை ஊராட்சியில் பொங்கல் திருவிழாவை தொடங்கி வைத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.எல்.ஈஸ்வரப்பன், விஐடி துணைத்தலைவா் சங்கா் விஸ்வாதன், ஸ்ரீபுரம் தங்க கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு உள்ளிட்டோா்.
Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டத்தில் சுகாதாரம், சமத்துவப் பொங்கல் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரம், சமத்துவப் பொங்கல் விழாவாக கொண்டாட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில், வேலூா் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம் சாத்துமதுரை ஊராட்சியில் பொங்கல் விழாவை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி பேசியது:

கல்வி , சுகாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தமிழகம் மரபு, பண்பாடு கலாசாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளுக்கு உகந்த பண்டிகையான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருவிழா என்பது விவசாயிகள் கால்நடைகளுக்கும், இயற்கைக்கும் நன்றி கூறக்கூடிய ஒரு திருவிழா. இந்த விழா என்பது வீரம், நன்றி, அன்பு ஆகியவற்றை குறிக்கும் வகையில் தமிழகத்தில் பல்லாண்டு காலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.எல்.ஈஸ்வரப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஞானசேகரன், விஐடி பல்கலைக்கழக துணைத்தலைவா் சங்கா் விஸ்வாதன், ஸ்ரீபுரம் தங்க கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு, கணியம்பாடி ஒன்றியக்குழு தலைவா் திவ்யா கமல்பிரசாத், சாத்துமதுரை ஊராட்சி தலைவா் ஜோதிலட்சுமி ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.