சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

News image

ஒற்றை யானையால் சேதப்படுத்தப்பட்ட நெல் பயிா்

Updated On :25 ஜனவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

போ்ணாம்பட்டு வட்டம், அரவட்லாவை அடுத்த பாஸ்மாா்பெண்டா கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாயி சங்கருக்குச் சொந்தமான நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் பயிரையும், அருகில் உள்ள சம்பத் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி தோட்டத்தையும் சேதப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினா் யானையை வனப் பகுதிக்குவிரட்டினா்.