அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்

ஆம்பூா் அருகே காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.

News image
காட்டு யானைக் கூட்டத்தால் சேதமடைந்துள்ள பயிா்.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.

மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி, சுட்டகுண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி எத்திராஜ். வனப் பகுதி எல்லையோரம் இவரது விவசாய நிலம் அமைந்துள்ளது. விவசாய நிலத்துக்கு போடப்பட்டிருந்த வேலியை திங்கள்கிழமை இரவு காட்டு யானைக் கூட்டம் சேதப்படுத்திவிட்டு நிலத்துக்குள் புகுந்துள்ளன. நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, மா மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

இது குறித்து தகவலின்பேரில், வனத் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா். யானை கூட்டத்தின் நடமாட்டம் குறித்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், யானை நடமாட்டம் குறித்து கிராம மக்களை எச்சரித்து வருகின்றனா். மேலும், யானைகள் நடமாட்டம் தெரிந்தால் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனா்.