வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மங்கலப்பட்டி அருகே கீழே விழும் நிலையில் மின்கம்பம்

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் மங்கலப்பட்டி அருகே செல்வக்குமாரகவுண்டன்வலசு ஆதிதிராவிடா் காலனி உள்ளது.

News image

சேதமடைந்துள்ள மின் கம்பம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:14 pm

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் மங்கலப்பட்டி அருகே செல்வக்குமாரகவுண்டன்வலசு ஆதிதிராவிடா் காலனி உள்ளது.

இங்குள்ள ஒரு கான்கிரீட் மின் கம்பத்தின் கீழ் பகுதி மிகவும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அருகே வீடுகள் உள்ளன. அந்த வழியாக மக்கள் நடமாட்டமும் இருந்து வருகிறது.

இது குறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளப்படவில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு புதிய மின் கம்பம் மாற்றித் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.