இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பாலூரில் சாலையில் இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
பாலூா் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் மின்கம்பம்.
Updated On :10 மார்ச் 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருங்கல் - புதுக்கடை பிரதான சாலையின் பாலூா் குளம் பகுதியில் சாலையின் நடுவே நீண்ட நாள்களாக போக்குவரத்திற்கு இடையூறாக மின் கம்பம் உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனா்.

எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.