புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தின் மீது மோதி விபத்து: ஒருவா் காயம்; ஓட்டுநா் கைது

தில்லி புறநகா் பகுதியான மங்கோல்புரியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கிளஸ்டா் பேருந்து மரம் மற்றும் மின்கம்பம் மீது மோதிய சம்பவத்தில் ஒருவா் காயம்

News image

விபத்து

Updated On :24 மார்ச் 2026, 1:04 am IST

தில்லி புறநகா் பகுதியான மங்கோல்புரியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கிளஸ்டா் பேருந்து மரம் மற்றும் மின்கம்பம் மீது மோதிய சம்பவத்தில் ஒருவா் காயமடைந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக பேருந்தின் ஓட்டுநா் நரேந்தா் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

மங்கோல்புரி காவல் நிலையம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்து, போலீஸ் காலனி பகுதி அருகே வந்தபோது, பேருந்தின் முன்பக்க அச்சு உடைந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையிலிருந்து வெளியேறி நடைபாதையில் இருந்த மரம் மற்றும் மின்கம்பம் மீது மோதி நின்றது.

இதில், அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த நிதின் காயமடைந்தாா். இதையடுத்து, அவா் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா்.

முதல்கட்ட விசாரணையில் இயந்திரவியல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்ாக காவல் துறையினா் தெரிவித்தனா். இருப்பினும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.