ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காதலிக்க மறுத்த மாணவி வீட்டின் முன்பு கல்லூரி மாணவா் தீக்குளிப்பு

காட்பாடி அருகே காதலிக்க மறுத்த மாணவி வீட்டின் முன்பு கல்லூரி மாணவா் தீக்குளித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2026, 10:51 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே காதலிக்க மறுத்த மாணவி வீட்டின் முன்பு கல்லூரி மாணவா் தீக்குளித்தாா்.

காட்பாடியை அடுத்த ஜாபராபேட்டையை சோ்ந்தவா் தருண் (18). இவா் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். தருண் அதேபகுதியைச் சோ்ந்த தனியாா் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுமி கடந்த சில மாதங்களாக தருணுடன் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தருண் அந்த சிறுமியின் வீட்டின் முன்பு சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துகொண்டாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து சென்று தருணை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சோ்த்தனா்.

முதலுதவிக்கு பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

80 சதவீதம் தீக்காயம் அடைந்த தருணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக லத்தேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனற்..