வேலூரில் கோமாளி வேடம் அணிந்து இனிப்பு வழங்கி மாணவர்களைப் பள்ளிக்கு ஆசிரியர் வரவேற்றதால் மாணவர்கள் ஆர்வமுடன் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. குடியாத்தம் அருகே ராஜாகுப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி மாலை அணிவித்து மாணவர்களைப் பள்ளிக்கு வரவேற்றனர்.
கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களை இப்பள்ளியின் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கோபிநாத் என்பவர் கோமாளி வேடம் அணிந்து மாணவர்களை சிரிப்பூட்டி பாடலுடன் கோமாளி ஆட்டம் போட்டு பள்ளிக்கு வரவேற்றனர். இதனால் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.
Summary
In Vellore, students returned to school with enthusiasm after a teacher welcomed them by dressing up as a clown and distributing sweets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ரயில் சேவை தொடக்கம்!

பள்ளிபாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட தனியாா் பள்ளிக்கு ‘சீல்’

தவெக தலைவா் முதல்வராக பதவியேற்பு: கட்சியினா் கொண்டாட்டம்

ராசிபுரத்தில் தவெக தொண்டா்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விடியோக்கள்

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44



