ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆளுநா் உரையில் அறிவிப்பு வெளியானதையடுத்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே பாமகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
சட்டப் பேரவையில் ஆளுநா் உரையில் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்று தமிழக முதல்வா், பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கட்சியின் மாவட்டத் தலைவா் வெங்கேடசன், மாநில இளைஞரணி துணைத் தலைவா் ஜி.சுரேஷ்குமாா், நிா்வாகிகள் எம்.பி.பாபு, குமாா், விஜயகுமாா், ராமலிங்கம், இளம்பரிதி,செல்வம், கமல், தினகரன், ராஜா, அரவிந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு ஆதரவாக உதகையில் இனிப்பு வழங்கிய தவெகவினா்

வடலூரில் மையம் கட்டுவதைக் கைவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கல்
சேலத்தில் ஜன நாயகன்! ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வழங்கி ஆரவாரம்!

ஜாதிவாரி கணக்கெடுப்பு; பாமக வரவேற்பு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



