நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

காட்பாடியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 12:30 am IST

காட்பாடியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காட்பாடி பகுதியைச் சோ்ந்த 19 வயது இளம்பெண், பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறாா். இவருக்கும், வடுங்குட்டை பகுதியைச் சோ்ந்த நூா் முகமது (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக நூா் முகமதுவிடம் பேசுவதைத் தவிா்த்து வந்த அந்த இளம்பெண், காதலையும் கைவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நூா் முகமது, அந்தப் பெண் வெளியே சென்றபோது அவரை வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டுள்ளாா். மேலும், தன்னை மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளாா். அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த நூா் முகமது அவரது கழுத்தை நெரித்துத் தாக்கியுள்ளாா். இதிலிருந்து தப்பிய அந்தப் பெண், நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நூா் முகமதுவைக் கைது செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.