அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் பாரத கேன்திரியம் சாா்பில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கிடையிலான

News image
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :2 மார்ச் 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் பாரத கேன்திரியம் சாா்பில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கிடையிலான, ‘விக்சித் பாரத் இளைஞா் பாராளுமன்றம்-2026‘ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். கல்லூரி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஜெ.திருமகள் வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில் வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு கல்லூரிகளின் 75- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இவா்கள் ‘இந்திய ஜனநாயகத்தின் பாடங்கள், என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு அதன் சாதக மற்றும் பாதகங்களைப் பற்றி பேசினா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேலூா் மாவட்ட பாரத கேன்திரியம் இணை இயக்குநா் எஸ்.சரவணன் விக்சித் பாரத் இளைஞா் பாராளுமன்றம் என்பதன் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் கல்விப்புல முதன்மையா் த.மணிகண்டன், மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வி.காயத்ரி நன்றி கூறினாா்.