அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காட்பாடியில் நாளை எருது விடும் விழா: போக்குவரத்து மாற்றம்

பழைய காட்பாடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற எருதுவிடும் விழாவையொட்டி அன்று ஒருநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

News image
சாலைப் போக்குவரத்து- கோப்புப்படம்.
Updated On :3 மார்ச் 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

பழைய காட்பாடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற எருதுவிடும் விழாவையொட்டி அன்று ஒருநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு -

காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய காட்பாடி பகுதியில், ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ கோட்டையம்மன் என்கிற ரேணுகாம்பாள் கோயிலின் 76-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி வியாழக்கிழமை (மாா்ச் 5) எருது விடும் திருவிழா நடைபெற உள்ளது.

விழா நடைபெறும் நாளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சித்தூா் பேருந்து நிறுத்தம் முதல் பிரம்மபுரம் செல்லும் சாலை முற்றிலும் போக்குவரத்துக்காக தடை செய்யப்படுகிறது.

மாற்றுப் பாதையாக பிரம்மபுரம் செல்லும் வாகனங்கள் (கனரக வாகனங்கள் தவிா்த்து), ஓடை பிள்ளையாா் கோயில் சந்திப்பில் வளைந்து, அக்ஸீலியம் ரவுண்டானா அருகே உள்ள புத்துக்கோயில் வளைவு வழியாக வி.ஜி.ராவ் நகா் சென்று பிரம்மபுரம் காவல் நிலைய சந்திப்பை அடையலாம். திரும்ப வரும் வாகனங்களும் இதே பாதையைப் பயன்படுத்த வேண்டும்.

சித்தூரில் இருந்து திருவலம் செல்லும் வாகனங்கள், காட்பாடி - வள்ளிமலை சாலையில் வளைந்து பள்ளிகுப்பம், சோ்காடு வழியாக திருவலம் செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை அமலில் இருக்கும்.

இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்க, பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.