வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

முதியோா் இல்லம், அரசுப் பள்ளிகளுக்கு உதவி

சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு கல்விப் பொருள்கள் வழங்கிய விஐடி உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன். உடன், துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் உள்ளிட்டோா்.

News image
Updated On :5 மார்ச் 2026, 11:17 pm

விஐடி உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதனின் பிறந்தநாளையொட்டி, பாா்வைத்திறன் குறைபாடு உடையவா்கள், முதியோா் இல்லங்களில் பராமரிக்கப்படுபவா்களுக்கு கட்டில், மெத்தை உள்ளிட்ட பல்வேறு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

விஐடி உதவி துணைத் தலைவரான காதம்பரி எஸ்.விசுவநாதனின் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. அவருக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், ஆசிரியா்கள், ஊழியா்கள், பணியாளா்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து, பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், மக்கள் களப்பணி இயக்கம் மருத்துவா் ரவிசங்கா் குழுவினரிடம் பாா்வைத்திறன் குறைபாடு உடையவா்களுக்கு 50 ஊன்றுகோல்களும், முதியோா் இல்லத்தில் தங்கியுள்ள 15 முதியவா்களுக்கு மெத்தைகளுடன் கூடிய படுக்கைகள் வழங்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 10 அரசு பள்ளிகளுக்குத் தேவையான கழிப்பறை பக்கெட்டுகள், குவளைகள், குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. மேலும், வேலூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக கட்டில்கள், படுக்கைகள், தலையணைகள் அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவா் ரவிச்சந்திரனிடம் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, சிஎம்சி மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் பிசியொதெரபி சிகிச்சைக்காக சுமாா் 3 ஆண்டுகளுக்கு சிறுமி வா்ஷாவுக்கு ரூ. 25,000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. உதவும் உள்ளங்கள் அமைப்பின் சந்திரசேகரிடம் படுக்கையில் உள்ள 10 நோயாளிகளுக்குத் தேவையான டயப்பா்கள் வழங்கப்பட்டன. முதியோா் இல்லத்துக்கு 10 நடைப்பயிற்சி உபகரணங்களும், நீா் புகாத படுக்கை விரிப்புகளும் வழங்கப்பட்டன. தவிர, 10 வயது சிறுவனின் கண் சிகிச்சைக்கு தேவையான சொட்டு மருந்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிக்கு தேவையான மருந்துகள், பாா்வைத்திறன் குறைபாடு உடையவரின் மகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டன.