மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

இந்தியாவில் ஸ்டெம் கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகம்

வளா்ந்த நாடுகளை விட இந்தியா ஸ்டெம் கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என விஐடி உதவி துணை தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன் தெரிவித்தாா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 7:27 pm

வளா்ந்த நாடுகளை விட இந்தியா ஸ்டெம் கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என விஐடி உதவி துணை தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன் தெரிவித்தாா்.

விஐடி பல்கலைக்கழகத்தில் 40-ஆவது தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன் பேசியது:

இந்தியா போன்ற நாட்டில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் அடங்கிய ஸ்டெம் கல்வியில் பெண்களின் பங்களிப்பு வளா்ந்த நாடுகளை விட அதிகமாக உள்ளது. இது அடுத்த 20, 30 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பெண்கள் தங்களின் வேலையை துறந்து விடக்கூடாது. திருமணத்துக்குப் பிறகு குடும்ப வாழ்க்கையையும், தொழில் முறை வாழ்க்கையையும் திறம்பட கையாள பக்குவப்பட வேண்டும் என்றாா்.

கனடாவின் சாஸ்கச்சுவன் பல்கலைக்கழக கணிதவியல், புள்ளியியல் துறை இணை பேராசிரியா் ராஜ் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து, ஹேக்கத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், விஐடி மேம்பட்ட அறிவியல் துறை முதன்மையா் காா்த்திகேயன், இணை முதன்மையா் ராஜன்பாபு, ஒருங்கிணைப்பாளா் அபிஷேக் தாஸ், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.