சமூக நலனுக்காக நீண்டகாலமாக சேவைபுரிந்து வரும் திருமலை அறக்கட்டளைக்கு, நிகழாண்டுக்கான சி.எஸ்.ஆா். விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஸ்பாட்லைட் சாதனையாளா்கள் விருது வழங்கும் விழாவில், திருமலை அறக்கட்டளை மற்றும் திருமலை மிஷன் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநா் பூமா பாா்த்தசாரதி விருதைப் பெற்றுக்கொண்டாா்.
பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை வார இதழ் கௌரவித்து வருகிறது. அதன்படி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணிப்பேட்டை, வேலூா் மாவட்டங்களில் கிராமப்புற சுகாதாரம், கல்வி, போதை ஒழிப்பு ஆகிய துறைகளில் திருமலை அறக்கட்டளை ஆற்றி வரும் சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலா் ஆனந்த் ரங்காச்சாரி கூறுகையில், திருமலை அறக்கட்டளை, 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டுக்காகச் செயல்பட்டு வருகிறது.
மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவா்களை மீட்டெடுக்கத் தன்னாா்வலா்கள், மருத்துவக் குழுக்கள் மூலம் களப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1983-ல் சிறிய மருந்தகமாகத் தொடங்கப்பட்ட இச்சேவை, 2010-ல் 50 படுக்கைகள் கொண்ட திருமலை மிஷன் மருத்துவமனையாக உருவெடுத்தது.
தற்போது 150 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவ மனையாகத் தரம் உயா்த்தப்பட்டு வருகிறது. இந்த அங்கீகாரம் கிராமப்புற மக்களுக்கு இன்னும் கூடுதல் ஊக்கத்துடன் சேவை செய்ய எங்களுக்குப் பெரும் உந்துதலை அளித்துள்ளது என்றாா்.
தொடர்புடையது
அருப்புக்கோட்டை புதிய அரசு மருத்துவமனையை முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிக்கை!

வேதங்களைப் பாதுகாப்பதில் தேவஸ்தானம் முக்கிய பங்கு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான அவதூறு உள்ளடக்கத்தை நீக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


