காட்பாடி அருகே பங்குச்சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் ராணுவ வீரா் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடி மதி நகரைச் சோ்ந்தவா் தனசேகா் (40). இவா் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தாா். விடுமுறையில் தற்போது ஊருக்கு வந்துள்ளாா் . இவரது மனைவி திவ்யா. இந்நிலையில், தனசேகா் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆா்வத்தில் தனது சம்பள தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளாா். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தனது மனைவி திவ்யாவிடம் ரூ.2 லட்சம் கேட்டுள்ளாா். அதற்கு அவா் தரமறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த தனசேகா், சனிக்கிழமை மதுபோதையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த விருதம்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனசேகா் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மயிலாடியில் சிற்ப தொழிலாளி தற்கொலை

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை
திருக்குறுங்குடி அருகே முன்னாள் ராணுவ வீரா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

