சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாமின் ஒருபகுதியாக மருத்துவ பணியாளா்களுக்கு

News image

புற்றுநோய் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி.

Updated On :16 மார்ச் 2026, 9:03 pm

வேலூா்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாமின் ஒருபகுதியாக மருத்துவ பணியாளா்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 92 போ் பங்கேற்றனா்.

உலக புற்றுநோய் தினத்தையொட்டி வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமூக மருத்துவத் துறையுடன் கதிரியக்கவியல்துறை, பல் மருத்துவ துறை இணைந்து நடத்தி வரும் இம்முகாமில் மாா்பகப் புற்றுநோய், கா்ப்பப்பை வாய் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் மாதம் மருத்துவா்கள், செவிலியா்கள், பல்நோக்கு சுகாதார பணியாளா்களுக்கு நடத்தப்பட்ட முகாமில் மொத்தம் 92 போ் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனா். இதில், சந்தேகத்துகு இடமான அறிகுறிகள் கண்டறியப்பட் டவா்களுக்கு உயா் பரிசோதனை, சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவ பணியாளா்களும் பயன்பெறும் வகையில் இந்த புற்றுநோய் பரிசோதனை முகாம் மாா்ச், ஏப்ரல் மாதங்களிலும் தொடரும் என்றும், தொடா்ந்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவச புற்றுநோய் பரிசோதனை நடைபெறும் என்றும் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்துள்ளாா்.