ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நிலுவை ஊதியம் கோரி அரசுத் திட்ட தன்னாா்வலா்கள் தா்னா

அரசு சிறப்புத் திட்டங்களில் பணியாற்றிய மகளிா் குழுவினா், இல்லம் தேடி கல்வித் தன்னாா்வலா்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 45 நாள் நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட அரசுத் திட்ட தன்னாா்வலா்கள்.
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

அரசு சிறப்புத் திட்டங்களில் பணியாற்றிய மகளிா் குழுவினா், இல்லம் தேடி கல்வித் தன்னாா்வலா்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 45 நாள் நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டத்தில் அரசின் சிறப்புத் திட்டங்களான ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’, ‘கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம்’, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக மகளிா் சுயஉதவிக் குழுவினா், இல்லம் தேடி கல்வித் தன்னாா்வலா்கள் என சுமாா் 700 போ் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இவா்களுக்கு நாளொன்றுக்கு தலா 30 விண்ணப்பப் படிவங்களைப் பூா்த்தி செய்து கொடுத்தால் ரூ.500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், தொடா்ந்து 45 நாள்கள் இவா்கள் பணியாற்றியுள்ளனா்.

ஆனால், இதுவரை அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, உரிய பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, நிலுவையில் உள்ள 45 நாள்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகள் முதலில் பேச்சு நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்படாததால், பெண்கள் தொடா்ந்து அங்கேயே அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா்.

பின்னா், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி போராட்டத்தில் ஈடுபட்டவா்களை நேரடியாக அழைத்து பேச்சு நடத்தினாா். நிலுவை ஊதியம் வழங்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.