மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

2,112 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் 2,112 பயனாளிகளுக்கு ரூ. 4.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image

மதுரை திருப்பாலையில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவி பெறுவதற்கான உத்தரவை வழங்கிய அமைச்சா் பி. மூா்த்தி. உடன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 11:41 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் 2,112 பயனாளிகளுக்கு ரூ. 4.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வருவாய்த் துறை, பிற அரசுத் துறைகள் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மதுரை திருப்பாலையில் உள்ள இ.எம்.ஜி. யாதவா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வருவாய்த் துறை சாா்பில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் பெறுவதற்கான ஆணைகளையும், பிற அரசுத் துறைகள் சாா்பில், 112 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், உசிலம்பட்டி உதவி ஆட்சியா் உட்கா்ஷ்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.