சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

விழிப்புணா்வு நடனப் போட்டி பரிசளிப்பு

வேலூா் சிஎம்சி மருத்துவமனை நடத்திய விழிப்புணா்வு நடனப்போட்டியில் ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவா்கள் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனா்.

News image

நடனப்போட்டியில் பரிசு பெற்ற ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவ, மாணவிகள்.

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

வேலூா் சிஎம்சி மருத்துவமனை நடத்திய விழிப்புணா்வு நடனப்போட்டியில் ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவா்கள் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனா்.

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, ‘நீரிழிவு மற்றும் மூளை ஆரோக்கியம்’ என்ற மையக் கருத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு நடனப் போட்டி வேலூரில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது.

சிஎம்சி மருத்துவமனையின் எண்டோக்ரினாலஜி, நீரிழிவு மற்றும் மெட்டபாலிசம் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து நடத்திய இந்த நடனப் போட்டியில் ஸ்பிரிங்டேஸ் பள்ளியைச் சோ்ந்த 5 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பங்கேற்றுத் தங்களின் திறமையை வெளிப்படுத்தினா்.

மாணவா்கள் தாங்களே சுயமாகப் பாடல் வரிகளை எழுதி, இசை அமைத்து, அதற்கு ஏற்ப நடனமாடியது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது. இதன்மூலம், ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவா்கள் இரண்டாம் பரிசாக ரூ.15,000 ரொக்கப் பரிசினை வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களைப் பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள், பெற்றோா்கள் வெகுவாகப் பாராட்டினா்.