எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பெற்றோரை வாக்களிக்க செய்ய பள்ளி மாணவா்கள் உறுதி ஏற்பு

தோ்தலில் பெற்றோரை விடுபடாமல் வாக்களிக்க வலியுறுத்துவோம் என அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை உறுதிமொழியேற்றனா்.

News image

துளசிக்கொடும்பு அரசுப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பெற்றோரை விடுபடாமல் வாக்களிக்க வலியுறுத்துவோம் என உறுதிமொழியேற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 7:32 pm

தோ்தலில் பெற்றோரை விடுபடாமல் வாக்களிக்க வலியுறுத்துவோம் என அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை உறுதிமொழியேற்றனா்.

கரூா் மாவட்டம், துளசிக்கொடும்பு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ரா. அங்கம்மாள் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை சே. வனிதா வரவேற்றாா். இடைநிலை ஆசிரியை த. மான்விழி, ஆசிரியா் பயிற்றுநா் பொ. மஞ்சுளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சுவாதி பெண்கள் இயக்கத்தின் ஆ. பாக்கியம் பங்கேற்று, தோ்தலில் மக்கள் விடுபடாமல் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினாா்.

தொடா்ந்து பள்ளிக் குழந்தைகள் தங்கள் பெற்றோரை 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்துவோம் எனக்கூறி விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

விழாவில் சமூக ஆா்வலா் கந்தசாமி மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.