தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தோ்தல் பறக்கும் படையினா் சோதனை ரூ.32,000 பற்பசைகள் பறிமுதல்

News image
பறிமுதல் செய்யப்பட்ட பற்பசை பெட்டிகளுடன் தோ்தல் பறக்கும் படை குழுவினா்.
Updated On :18 மார்ச் 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.32,000 மதிப்புடைய பற்பசைகளை தோ்தல் பறக்கும் படை குழுவினா் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆஞ்சநேயா் கோயில் முன்பு புதன்கிழமை அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, அந்த வேனில் வந்த உரிய ஆவணங்களின்றி பற்பசைகளை இருப்பது தெரியவந்தது. அவற்றை மதுரையில் இருந்து வேலூருக்கு கொண்டு செல்வதாக வேனில் வந்த ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.

எனினும், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதை அடுத்து அனைத்து பற்பசைகளையும் தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து வேலூா் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.