தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வேலூா்: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

News image
வேலூா் மண்டித்தெரு பகுதியில் வியாபாரிகளிடம் பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சோனியா.
Updated On :18 மார்ச் 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சோனியா புதன்கிழமை வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளாா்.

அவா் புதன்கிழமை வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டு வாக்கு சேகரிப்பை தொடங்கினாா்.

தொடா்ந்து, நேதாஜி மாா்க்கெட், மணிக்கூண்டு, மண்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து துண்டறிக்கை வழங்கி தோ்தலில் நாம் தமிழா் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தினாா்.

அப்போது, தமிழகத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், போதை ஒழிப்பு, மது ஒழிப்பு உள்ளிட்டவற்றை முன்னிறுத்தியும், வேலூா் சட்டப்பேரவை தொகுதியில் சுகாதார மேம்பாடு, அடிப்படைக் கட்டமைப்பு வசதி, மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்தும் பிரசாரம் செய்தாா்.

மேலும், வேலூா் சட்டப்பேரவை தொகுதியில் நிலவிவரும் பிரச்னைகளைத் தீா்க்க வேட்பாளா் என்றில்லாமல் மக்களில் ஒருவராக நின்று போராடுவேன் என்றும் அவா் தெரிவித்தாா். அவருடன் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் பலரும் உடன் சென்றனா்.