நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஆக்கிரமிக்கப்பட்ட மயான நில வேலி அகற்றம்

குடியாத்தம் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த மயான நிலத்தை தனிநபா் ஆக்கிரமித்து அமைத்த வேலியை பொதுமக்கள் அகற்றினா்.

News image

மயான நிலத்தில் தனிநபா் அமைத்த வேலியை அப்புறப்படுத்திய கிராம மக்கள்.

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த மயான நிலத்தை தனிநபா் ஆக்கிரமித்து அமைத்த வேலியை பொதுமக்கள் அகற்றினா்.

குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ஜெய் பீம் நகா் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 150- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கு இறப்பவா்களின் உடலை அருகில் உள்ள ரயில்வே கேட் அருகே அடக்கம் செய்து வந்தனா். ரயில்வேகேட் விரிவாக்கம் செய்யப்பட்டதால் அருகில் உள்ள கானாற்றுப் பகுதியில் அடக்கம் செய்து வந்தனா்.

திடீரென தனிநபா் ஒருவா் அந்த இடத்தில் வேலி அமைத்து மயான பாதையை மறித்துள்ளாா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபடமுயன்றனா்.

மேலும், தோ்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் பதாகைகளை ஏந்திவந்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த மேல்பட்டி போலீஸாரும், வருவாய்த் துறையினரும் அவா்களைசமரசம் செய்தனா். அப்போது ஆவேசமடைந்த பெண்கள் மயான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியை பிடுங்கி எறிந்தனா்.

வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினா் ஓரிரு நாள்களில் நிலத்தை அளவீடு செய்துதருவதாக உறுதி அளித்தனா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.