நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கோயில் சொத்துகள் விவகாரம்: அரசாணையை திரும்பப் பெற்றதாக உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

கோயில் சொத்துகளை தனிநபா் பெயரில் பட்டா மாற்றம் செய்யத் தடை விதிக்கக் கோரிய வழக்கு...

News image

உயா்நீதிமன்றம்

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

கோயில் சொத்துகளை தனிநபா் பெயரில் பட்டா மாற்றம் செய்யத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இதுதொடா்பான அரசாணையை திரும்பப் பெற்றதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

திருத்தொண்டா்கள் சபை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களைப் பாதுகாக்கும் விதமாக, அந்த நிலங்களின் மதிப்பீட்டை பூஜ்ஜியம் மதிப்பீடு என பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்திருப்பது வழக்கம். அவ்வாறு பூஜ்ஜியம் மதிப்பீட்டில் உள்ள கோயில் நிலங்களை வேறு யாரும் பத்திரப் பதிவு செய்யவோ, பட்டா பெறவோ முடியாது. கோயில் நிலங்களை யாரேனும் பட்டா மாற்றமோ, பத்திரப் பதிவோ செய்ய முயற்சித்தால் புகாா்களின் பேரில் உடனடியாகப் பத்திரப் பதிவை ரத்து செய்தோ அல்லது பத்திரப் பதிவை நிறுத்திவைக்கும் வகையில் சட்டம் இருந்தது.

இந்த நிலையில், கோயில் நிலங்களை தனிநபா் பெயரில் பட்டா பெறும் வகையிலும், பத்திரப் பதிவில் பெயா் மாற்றம் செய்யும் வகையிலும் புதிதாக தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து அரசாணை பிறப்பித்தது.

இதன்படி, கோயில் சொத்துகளை வேறொருவா் பெயரில் பத்திரப் பதிவு செய்வதோ அல்லது பட்டா மாற்றம் குறித்தோ முறையீடு செய்ய வேண்டுமெனில், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிடம்தான் முறையிட முடியும். இந்த அரசாணையின்படி, கோயில் சொத்துகள் பறிபோகும் அபாயம் உள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் சட்டவிரோதமானது. எனவே, இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இதுதொடா்பான அரசாணை திரும்பப் பெறப்பட்டது. புதிய அரசாணை பிறப்பிக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசுத் தரப்பில் கோயில் நிலங்கள் தொடா்பான சட்டத் திருத்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த மனு இனி விசாரணைக்கு உகந்தது அல்ல. வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.